கல்குடாவில் 10 கோடி ரூபாய் பெறுமதியான வலம்புரிச் சங்கு கைப்பற்றப்பட்டது- 7 பேர் கைது

ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
புலானாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து சுமார் 10 கோடி ரூபாய் பெறுமதியான வலம்புரி சங்கு ஒன்றை விற்பனை செய்ய முயன்ற 7 பேரை மட்டக்களப்பு கல்குடாவில் வைத்து திங்கட்கிழமை (23.01.2017) மாலை விஷேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

பொத்துவில் பாணமை சாஸ்திரவெளி விஷேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி எம்.ஐ. இப்றாஹீம் தலைமையிலான படையினர் நடத்திய தேடுதலில், வலம்புரிச் சங்கை தம்வசம் தை;திருந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதோடு வலம்புரிச் சங்கும் மீட்கப்பட்டது.

சந்தேக நபர்கள் மாத்தளை, வாழைச்சேனை மற்றும் பொலொன்னறுவை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களென தெரிவிக்கப்படுகிறது.

சுமார் ஓன்றரை அடி நீளமான இந்த பெறுமதி மிக்க வலம்புரிச் சங்கு மட்டக்களப்பு மாவட்ட வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வலம்புரி சங்கு மற்றும் சந்தேக நபர்களை நபர்களையும் மட்டக்களப்பு நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக மாவட்ட வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள பொறுப்பதிகாரி என். சுரேஸ்குமார் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -