திருகோணமலை மாவட்ட செயலகத்தில் ஏதாவது ஒரு பொறுப்பு வாய்ந்த பதவிக்கு முஸ்லிம் அதிகாரி ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு கிண்ணியா கிழக்கு வள அபிவிருத்தி மையம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹகீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் சுமார் 43 வீதம் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். எனினும் மாவட்ட செயலகத்தின் எந்த ஒரு பொறுப்பு வாய்ந்த பதவியிலும் முஸ்லிம்கள் இல்லை. இதனால் முஸ்லிம்கள் சம்பந்தப் பட்ட சில விடயங்களில் இங்கு திருத்தியற்ற நிலை காணப் படுகின்றது.
எனவே, இதனை நிவர்த்திக்கும் பொருட்டு மாவட்ட செயலகத்தின் ஏதாவது ஒரு பொறுப்பு வாய்ந்த பதவிக்கு முஸ்லிம் அதிகாரி ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு இக்கோரிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
