திருகோணமலையில் இரு சடலங்கள் மீட்பு..!

அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை மாவட்டத்தில் புல்மோட்டை பொலிஸ் பிரிவு மற்றும் துறைமுக பொலிஸ் பிரிவுகளிலும் இரு சடலங்கள் இன்று (18) காலை கரையோரங்களில் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புல்மோட்டை பொலிஸ் பிரிவில் அரிசிமலைப்பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஆணுறுப்பு வெட்டப்பட்டவாறு சடலம் கரையொதுங்கியுள்ளது.

இதேவேளை திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அருகிலுள்ள கடற்கரையில் கருப்பு கலிசன் சிவப்பு டிசேட் அணிந்தவாறு சடலமொன்று கரையொதுங்கியுள்ளது.

இவரின் கலிசன் பக்கட்டில் அடையாள அட்டை பிரதியொன்று காணப்படுவதாகவும் இதில் வாழைச்சேனை-விபுலானந்தர் வீதி வேலாயுதம் ஜெயசங்கர் (45வயது) என காணப்படுவதாகவும் தெரியவருகின்றது.

குறித்த சடலம் தொடர்பில் புல்மோட்டை மற்றும் துறைமுக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -