நடிகை திரிஷா ஜெயலலிதா சமாதிக்குச்சென்று அஞ்சலி செலுத்தினார்

றைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் கடந்த 6-ந் தேதி அடக்கம் செய்யப்பட்டது. அங்கு தினமும் ஏராளமான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

ஜெயலலிதாவின் சமாதியை பார்ப்பதற்காக தமிழகம் முழுவதும் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாள் என்பதால் 6-வது நாளாக அதிகாலை 4 மணி முதலே ஜெயலலிதா சமாதியில் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

காலை 9.30 மணி அளவில் நடிகை திரிஷா தனது தாயுடன் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்த வந்தார். திரிஷா மட்டும் போலீசாரின் பாதுகாப்பு அரண்களை தாண்டி ஜெயலலிதா சமாதி அருகே அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டார். அவர் ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை சுற்றி வந்து மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் அவர் சமாதி அருகே விழுந்து கும்பிட்டார்.

பின்னர் நடிகை திரிஷாவும், அவரது தாயையும் போலீசார் பாதுகாப்புடன் அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -