கடற்படை அதிகாரியால் ஊடகவியலாளர் தாக்கப்பட்டமையை எதிர்த்து கறுப்பு பட்டியணிந்து ஆர்ப்பாட்டம் -படம்

ம்பாந்தோட்டை, மாகம்புர துறைமுக வளாகத்தில் வைத்து கடற்படைத் தளபதியினால் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (13) திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்கள் கறுப்பு பட்டயணிந்து தனது எதிர்பினை தெரிவித்தனர்.

சம்பூர் – நாவலடி பிரதான வீதி திறப்பு விழாவிற்காக செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களே இவ்வாறு கறுப்பு பட்டிகளை அணிந்து எதிர்பிணை தெரிவித்துள்ளனர்.

இவ்விழாவின் போது கிழக்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான கடற்படையினர் மற்றும் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், மாகாண சபை அமைச்சர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
தமது சகோதர ஊடகவியலாளர் தாக்கப்பட்டமை தொடர்பாக நல்லாட்சி அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் ஊடகவியலாளர்களுக்கு தாக்குதல் நடாத்துவதை நிறுத்த வேண்டுமெனவும் ஊடகவியலாளர்கள் இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.டைலிசிலோன்


trinco journalists



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -