டெய்லி சிலோன் ஊடகவியலாளர் எஸ்.எம். சர்ஜான் எழுதிய "இருட்டறை மெழுகுவர்த்தி" கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா எதிர்வரும் 04ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு வவுனியா ஆண்டியா புளியங்குளம் முஸ்லிம் வித்தியாலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் கைத்தொழில் துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளதுடன் முதன்மை விருந்தினர்களாக பிரதியமைச்சர் அமீர் அலி மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பங்கேற்கவுள்ளனர்.
நிகழ்வில் கௌரவ அதிதிகளாக நவமணி பத்திரிகை பிரதம ஆசிரியரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவருமான என்.எம். அமீன், விடிவெள்ளி பத்திரிகை பிரதம ஆசிரியர் எம்.பி.எம். பைரூஸ், டெய்லி சிலோன் பிரதம செய்தி ஆசிரியர் எஸ்.ஏ.அஷ்கர்கான், நவமணி ஆசிரியர் பீட உறுப்பினர் கலைவாதி கலீல் மற்றும் கலாநிதி கவிஞர் அகளங்கன் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்புவிடுக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -