சாரதிகளுக்கு.. விசேட சோதனை நடவடிக்கை ஜனவரி 6இல் ஆரம்பம்

மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கண்டறிவதற்காக பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கை ஜனவரி 6ஆம் திகதிவரை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நத்தார் தினத்தை முன்னிட்டு இந்த சோதனை நடவடிக்கைகள் கடந்த சில நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மதுபோதையில் வாகனம் செலுத்துவதால் அதிக விபத்துகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பண்டிகை காலம் என்பதால் இந்த நிலைமை மேலும் அதிகரிக்கலாம் என்பதைக் கருத்தில் கொண்டே விசேட சோதனை நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மேற்படி சோதனை நடவடிக்கையானது ஜனவரி மாதம் 6ஆம் திகதி வரை தொடரவிருப்பதாக பொலிஸ் தலைமையகத்தின் போக்குவரத்துப் பிரிவு பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம்.யு.சந்திரதாஸ தெரிவித்தார்.

புதுவருடத்தை முன்னிட்டு மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கண்டறிவதற்கான இந்த விசேட சோதனை நடவடிக்கைகள் தொடரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -