விமான நிலைய பெண் ஊழியர்கள் 5 பேர் சுட்டுக் கொலை

ப்கனிய விமான நிலைய பெண் ஊழியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டை தாலிபன்கள் நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இது குறித்து சினுவா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், “ஆப்கனில் காந்தஹார் மாகாணத்தில் சனிக்கிழமை காலை 5.30 மணியளவில் பெண் ஊழியர்கள் வாகனத்தில் அலுவகத்துக்கு சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களது வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

இந்தத் தாக்குதலில் விமான பெண் ஊழியர்கள் ஐவரும் கொல்லப்பட்டனர். அப்பெண்கள் பயணித்த வாகனத்தின் ஒட்டுநரும் இதில் பலியானார். இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தப் அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் தாலிபன்கள் இதில் ஈடுபட்டிருக்கலாம் என் சந்தேகிக்கப்படுகிறது.

ஆப்கனில் தாலிபன்கள் ஆட்சிக் காலத்தில் பெண்கள் கல்வி கற்கவும், பணிக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.சாஜில்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -