கண்டி பதியுத்தீன் மஹ்மூத் மகளிர் கல்லூரியின் தமிழ் தின விழா டிசம்பர் 3ஆம் திகதி.!

ண்டி பதியுத்தீன் மஹ்மூத் மகளிர் கல்லூரியின் முத்தமிழ் மன்றம் ஏற்பாடு செய்துள்ள தமிழ்த்தின விழா டிசம்பர் 3ஆம் திகதி முற்பகல் 9.00மணிக்கு கல்லூரி அதிபர் சிஹானா ரஹீம் தலைமையில் கல்லூரி மண்டபத்தில் நடைபெறும்

அரசாங்க தகவல் திணைக்கள முன்னாள் தகவல் அதிகாரியும் 'ஒளியரசி' சஞ்சிகையின் ஆசிரிய பீட ஆலோசகருமான கலாபூசணம் நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் பிரதம அதிதியாக கலந்துக்கொள்வதுடன் மத்திய மாகாண கல்விப்பணிப்பளர் உட்பட அதிதிகள் பலரும் இந்த விழாவில் கலந்து கொள்வர். 

இவ்விழாவில் கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறுவதுடன் மாணவிகளிடையே நடத்தப்பட்ட தமிழ்தின போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவிகளுக்கு இவ்விழாவின் போது பரிசில்களும் வழங்கப்படுவதும் நினைவு மலர் ஒன்றும் வெளியிடப்படவிருப்பதாக மேற்படி கல்லூரியின் முத்தமிழ் மன்ற பொறுப்பாசிரியையான அரபா மன்சூர் தெரிவித்தார்.
என்.நஜ்முல் ஹுசைன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -