கதிர் கான் -
"ஸ்வர்ண புறவற" விருது வழங்கல் நிகழ்வும், பரிசளிப்பு வைபவமும் நாளை 20 செவ்வாய்க்கிழமை இரண்டு மணிக்கு நெலும் பொகுண மஹிந்த ராஜபக்ச அரங்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது.
பல்வேறு துறைகளில் வினைத்திறனாக செயற்படும் நாடளாவிய ரீதியில் உள்ள 330 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கே இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளன.
உள்ளூராட்சி அதிகார சபைகளின் வினைத்திறனை மேம்படுத்துவதற்கும், மக்களின் ஒத்துழைப்பின் ஊடாக மனித நேயத்துடன் கூடிய நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்கான ஓர் ஏற்படாகவே இந்த ஒருங்கிணைந்த நிகழ்வு நடத்தப்படுவதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி தெரிவித்தார். மேலும் அமைச்சர் பயிஸர் முஸ்தபாவின் வழிகாட்டலில் இந்த வைபவம் இடம்பெறுவதாக அமைச்சரின் ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
