15 ஆம் திக­திக்கு முன்னர் செய­லாளரை அறிவிக்கவும்- மு.காவுக்கு கடிதம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் செய­லாளர் பதவி தொடர்­பான சிக்­கலை, இம்­மாதம் 15 ஆம் திக­திக்கு முன்னர் தீர்த்து, செய­லாளர் அல்­லது செய­லாளர் நாயகம் என்­கிற பத­வி­களில் இரண்­டி­லொன்­றினை மாத்­திரம் முறைப்­படி தாபித்து, தேர்தல் ஆணைக்­கு­ழு­வுக்கு அறி­விக்­கு­மாறு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­சுக்கு தேர்தல் ஆணைக்­கு­ழுவின் தவி­சாளர் மஹிந்த தேசப்­பி­ரிய – எழுத்து மூலம் அறி­வித்­துள்ளார்.

முஸ்லிம் காங்­கி­ரசின் தலைவர் ரவூப் ஹக்­கீ­முக்கு நவம்பர் மாதம் 16 ஆம் திக­தி­யி­டப்­பட்டு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்ள கடி­தத்­தி­லேயே, இந்த அறி­வித்தல் விடுக்­கப்­பட்­டுள்­ளது.

குறிப்­பிட்ட பிரச்­சினை தீர்க்­கப்­படும் வரையில், அதா­வது இம்­மாதம் 15 ஆம் திகதி வரையில், முஸ்லிம் காங்­கி­ரசின் செய­லாளர் மற்றும் செய­லாளர் நாயகம் ஆகிய இரு­வரின் பெயர்­க­ளையும், அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட அர­சியல் கட்­சி­களின் நிரலில், செய­லாளர் பத­விக்­கு­ரி­ய­தாகக் காட்­சிப்­ப­டுத்­தா­தி­ருப்­ப­தற்கு, தாம் தீர்­மானம் மேற்­கொண்­டுள்­ள­தா­கவும் – அந்தக் கடி­தத்தில் மஹிந்த தேசப்­பி­ரிய குறிப்­பிட்­டுள்ளார்.
முஸ்லிம் காங்­கி­ரசின் செய­லாளர் பதவி தொடர்­பான சிக்­கலைத் தீர்த்துக் கொள்ளத் தவறும் பட்­சத்தில், எதிர்­வரும் தேர்­தல்­க­ளின்­போது, முஸ்லிம் காங்­கிரஸ் போட்­டி­யி­டு­வதில் சிக்கல் நிலை உரு­வாகும் என்­ப­தையும் ஆணைக்­கு­ழுவின் தவி­சாளர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

மேலும் அந்தக் கடி­தத்தில்,
‘ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரசில் கடந்த 07.11.2015 ஆம் திக­தி­யன்று மேற்­கொள்­ளப்­பட்ட யாப்புத் திருத்­தத்தின் மூலம், கட்­சியில் செய­லாளர் நாயகம் மற்றும் செய­லாளர் என இரண்டு பத­விகள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது.

அவற்றில், தேர்தல் அலு­வல்­களின் போது – செய­லாளர் பதவி ஏற்­பு­டை­ய­தென அறி­விக்­கப்­பட்­டது. மேலும் இது­வரை செய­லாளர் நாயகம் பதவி வகித்த எம்.ரி. ஹச­ன­லிக்குப் பதி­லாக, ஏ.சி.ஏ. மொஹம்மட் மன்சூர் செய­லா­ள­ராக நிய­மிக்­கப்­பட்டார்.

இருப்­பினும் செய­லாளர் நாயகம் எம்.ரி. ஹச­னலி தனது பெயர் – அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட அர­சியல் கட்­சி­களின் பட்­டி­ய­லி­லி­ருந்து நீக்­கப்­ப­டு­வது தொடர்­பாக ஆட்­சே­பனை தெரி­வித்­தி­ருந்தார்.

இந்த நிலையில், முஸ்லிம் காங்­கி­ரசின் செய­லாளர் பதவி தொடர்­பான சிக்கல் தீர்க்­கப்­ப­ட­வில்லை.

இதே­வேளை, தேர்தல் அலு­வல்கள் தொடர்­பான நியதிச் சட்ட நட­வ­டிக்­கை­களின் போது, நெருக்­க­டி­யான நிலை­மைகள் தோன்ற முடி­யு­மா­கையால், அர­சியல் கட்­சி­யொன்று தொடர்பில் செயலாளர் பதவி ஒன்று மட்டும் செல்லுபடியாகும்.

மேலும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும், செயலாளர் பதவிகள் இரண்டு அல்லது செயலாளர் மற்றும் செயலாளர் நாயகம் என இரு பதவிகள் கிடையாது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -