திருகோணமலை சிறைச்சாலையிலுள்ள கைதிகளுக்கு எச்.ஐ.வி பற்றிய விழிப்புணர்வு தேவை..!

திருகோணமலை சிறைச்சாலையிலுள்ள கைதிகளுக்கு எச்.ஐ.வி/எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்வை வழங்குமாறு சிறைச்சாலைகள் திணைக்களம் கடிதம் மூலம் அறிவித்துள்ளது.

திருகோணமலை பொது வைத்தியசாலையின் எயிட்ஸ் பிரிவு வைத்திய அதிகாரியை நாடி இரண்டு நாட்களுக்கு எயிட்ஸ் பற்றிய தெளிவுகளை கைதிகளுக்கு வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விழிப்புணர்வு நடவடிக்கையை இம்மாதம் 20 ஆம் திகதிக்கு முன் நடாத்தி அதன் அறிக்கையை அனுப்பி வைக்குமாறு சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

திருகோணமலை சிறைச்சாலையிலுள்ள சிறைக்கைதிகள் மற்றும் விளக்கமறியல் கைதிகள் எச்.ஐ.வின் தாக்கம் மற்றும் அதனால் ஏற்படுகின்ற விளைவுகள் குறித்து அறிய வேண்டும் எனும் நோக்கிலேயே இந்த விழிப்புணர்வு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அத்திணைக்களம் அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இவ்வாறு நடத்தப்பட்டதும் விசேடமாகும்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -