க.கிஷாந்தன்-
கண்பார்வையற்ற விழிப்புலனற்ற மானிடப்பால் எமது கவனம் ஈர்க்கப்பட வேண்டிய நல்லதோர் வாய்ப்பினை உலகுக்கு துலாம்பரமாக வெளிச்சமிட்டு காட்டுவதே இவ்வெள்ளைப் பிரம்பு தினமாகும்.
உலக வெள்ளை 1961 முதல் வெள்ளைப் பிரம்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் 15 ஆம் திகதி விழிப்புலனற்றோருக்கான வெள்ளைப் பிரம்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் சர்வதேச வெள்ளை பிரம்பு தினத்தை முன்னிட்டு அட்டன் விழிப்பு, நேத்ரா கண்பார்வை அற்றோர் பாடசாலை ஆகியோர் இணைந்து நடத்திய விழிப்புணர்வு பேரணி 15.10.2016 அன்று அட்டன் பஸ் தரிப்பிடத்திலிருந்து பிரதான வீதியினூடாக புட் சிட்டி வரை இடம்பெற்றது.
இதன்போது கலந்து கொண்டவர்களை இங்கு படங்களில் காணலாம்.




