சமீபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி- சவூதி அரேபியா நிவாரண அமைப்பு

வூதி அரேபியா இஸ்லாமிய



நிவாரண அமைப்பின் ஏற்பாட்டில் இந்நாட்களில் நிலவும் கடுமையான வரட்சி மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கொலன்னாவ, வெல்லம்பிட்டிய ஆகிய மக்களுக்கு நிவாரணம் வழங்கி வைக்கும் நிகழ்வு தெமட்டைகொடை மல்லிகாராம ஜும்ஆப் பள்ளிவாசலில் சவூதி அரேபியா இஸ்லாமிய நிவாரண அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி அஸ்ஸெய்க் இம்ரான் ஜமால்தீன் தலைமையில் 10-10-2016 ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சவூதி அரேபியாவிலிருந்து வருகை தந்துள்ள சவூதி அரேபியா இஸ்லாமிய நிவாரண அமைப்பின் பிரதிநிதிகளான கலாநிதி முஹமட் பா ஜுனைட், அஹமட் அஹிஜா அலி மற்றும் அஸ்ஸெய்க் உவைஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில் அத்திவசியமான உணவுப் பொருட்களான அரசி, பால மா, பருப்பு. நுளம்பு வலை உள்ளிட்ட தலா 5000 ருபா பெறுமதியான உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிவாரணப் பொருட்கள் மொத்தமாக மிகவும் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்து 3000 பேருக்கு வழங்கி வைக்கப்படவுள்ளது. கடுமையான வெள்ளப் பாதிப்புக்குள்ளான மல்வானை, மாபோல. கன்னத்தோட்டைப் பகுதிகளிலும் 11-12 ஆகிய திகதிகளில் வழங்கப்படவுள்ளது.

இக்பால் அலி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -