இலங்கை முஸ்லீம் சமூகத்தில் வயது குறைந்த இளம் பெண்களுக்கு நடக்கும் திருமணங்கள் தொடர்பில் ஒரு தாய் என்ற ரீதியில் தனக்கு உடன்படமுடியவில்லை என சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சந்திரானி பண்டார குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் பொது விவாக விவாகரத்து சட்டப்படி 18 வயதை தாண்டிய பிரஜைகளுக்கு திருமணம் முடிக்க அனுமதி வழங்கபட்டுள்ளபோது முஸ்லீம் விவாக விவாகரத்து சட்டப்பிரகாரம் அந்த வயதெல்லை தளர்வு செய்யப்பட்டுள்ளது.
புதிய அரசியல் சீரமைப்பில் இந்த வயதெல்லை 18 ஆக உயர்த்தப்பட்டவேண்டும் என மகளிர் அமைப்புகள் கோரிக்கை முனவைத்துவரும் நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்த விடயத்தில் முஸ்லீம் தலைவர்கள் நல்லதொரு முடிவுக்கு வரவேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.