ஏறாவூரில் இருக்கும் ஆயுர்வேத வைத்தியசாலையில் இருக்கும் அமீர் அலி என்னும் பெயரை உடனடியாக அங்கிருந்து நீக்குமாறு வைத்தியசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினர் யூ.எல்.முகையதீன் பாவா தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற ஏறாவூர் ஆயுர்வேத வைத்தியசாலையின் புதிய கட்டடத்துக்கான அடிக்கல்வைக்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து அங்கு உரை நிகழ்த்திய முகையதீன் பாவா குறிப்பிட்டதாவது:
ஏறாவூரில் இருக்கும் ஒவ்வொரு அரசாங்க கட்டிடத்திற்கும் ஒவ்வொருவரினுடைய பெயர்களை வைத்துள்ளனர். இப்படியே விடமுடியாது. இவ்வூரின் ஆயுர்வேத வைத்தியசாலைக்கு அமீர் அலியின் பெயரை வைக்க வேண்டிய தேவையில்லை. எனவே உடனடியாக அப்பெயரை நீக்கிவிட்டு எறாவூர் ஆயுர்வேத வைத்தியசாலை என்ற பெயரை வைக்குமாறு இங்கு கூடியிருக்கும் மாகாண சுகாதார பணிப்பாளர் மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கும் முன்னிலையில் கோரிக்கை விடுக்கிறேன் என கோரிக்கை விடுத்தார்.