ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகியோருக்கு இடையில் முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள், கூட்டு எதிரணியின் செயற்பாடுகள் மற்றும் நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாகவும் இந்தச் சிறப்புக் கலந்துரையாடலில் ஆராயப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.