எம்.ஜி.ஆரின் கதை புத்தக அறிமுக விழாவும் செயற்கை கை வழங்கும் நிகழ்வு நுவரெலியா பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம சிறப்பு அதிதிகளாக மதத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர் ராஜாராம் தென்னிந்தியாவின் பிரபல மறைந்த நடிகர் எஸ்.ஏ அசோகனின் மகனான நடிகர் வின்சன்ட் அசோகன், இதயக்கனி பத்திரிகையின் ஆசிரியர் எஸ்.விஜயன் உட்பட தென்னிந்திய குழுவினரும் கலந்து சிறப்பித்தார்கள். கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணனின் வழிகாட்டலின் பேரில் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் தலைமையில் தென்னிந்தியாவின் மறைந்த நடிகரும் முதலமைச்சருமான எம்.ஜி.ராச்சந்திரனின் (எம்.ஜி.ஆரின்) வரலாற்று குறிப்புகள் அடங்கிய நூலை வெளியிட்டு வைக்கபட்டது.
இதன் போது நுலரெலியா நகர வாழி வர்ததகர்கள், ஆசிரியர்கள், புத்தி ஜுவிகள் கலந்துக் கொண்டார்கள். இந் நிகழ்வில் பாடசாலை மாணவன் ஒருவனுக்கு செயற்;கை கை ஒன்று இந்திய இலங்கை ரோட்டரி கழகத்தின் ஏற்பாட்டில் இலசவகமாக வழங்கி வைக்கபட்டது. இந்த செய்றகை கை மூலமாக எமுதுவதற்கும் கரண்டியின் உதவியுடன் சாப்பிடுவதற்கும். வாகனத்தை ஓட்டுவதற்கும் இது போன்ற ஏனைய வேலைகளை செய்வதற்கும் உதவியாக இருக்கும்.