பசும்பொன் வீடமைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு..!

க.கிஷாந்தன்-
ப்புத்தளை பிட்ரத்மலை தோட்டத்தில் மண்சரிவு அபாயத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய வீடுகளை கட்டிக்கொடுக்க 31.07.2016 அன்று மலைநாட்டு புதிய கிராமம் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பி.திகாம்பரம் ஏற்பாட்டில் பசும்பொன் வீடமைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. 

மலைநாட்டு புதிய கிராமம் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் கீழ் மேற்படி மண்சரிவு அபாயத்தினால் பாதிக்கப்பட்ட 67 குடும்பங்களுக்கு குடியிருப்புகள் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. 

இந்நிகழ்வின் போது நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ், பதுளை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏ. அரவிந்தகுமார், வடிவேல் சுரேஷ், மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமணி மற்றும் பாடசாலை அதிபர் இராஜமாணிக்கம் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -