க.கிஷாந்தன்-
அப்புத்தளை பிட்ரத்மலை தோட்டத்தில் மண்சரிவு அபாயத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய வீடுகளை கட்டிக்கொடுக்க 31.07.2016 அன்று மலைநாட்டு புதிய கிராமம் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பி.திகாம்பரம் ஏற்பாட்டில் பசும்பொன் வீடமைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
மலைநாட்டு புதிய கிராமம் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் கீழ் மேற்படி மண்சரிவு அபாயத்தினால் பாதிக்கப்பட்ட 67 குடும்பங்களுக்கு குடியிருப்புகள் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்நிகழ்வின் போது நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ், பதுளை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏ. அரவிந்தகுமார், வடிவேல் சுரேஷ், மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமணி மற்றும் பாடசாலை அதிபர் இராஜமாணிக்கம் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.