உலக இஸ்லாமிய பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை இந்தோனேசியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகும் உலக இஸ்லாமிய பொருளாதார மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் விசேட உரையொன்றையும் ஆற்றவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 3ம் திகதி இரவு பிரதமர் மீளவும் நாடு திரும்ப உள்ளதாக பிரதமர் அலுவலம் தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தில் அமைச்சர்களான ஏ.எச்.எம். பௌசி, கபீர் ஹாசீம், சுஜீவ சேனசிங்க மற்றும் பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் இணைந்து கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.