சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசலின் அதிரடி நடவடிக்கை...!

ஹாசிப் யாஸீன்-
சாய்ந்தமருது மக்களின் நீண்டநாள் கோரிக்கையான தனியான உள்ளூராட்சி சபைக்கோரிக்கையை வலியுறுத்தியும், அரசியல் தலைமைகளுக்கு அழுத்தங்களை கொடுக்குமுகமாக இன்று (22) வெள்ளிக்கிழமை சாய்ந்தமருதிலுள்ள சகல ஜூம்ஆப் பள்ளிவாசலிலும்குத்பா பிரசங்கமும், விசேட துஆப் பிரார்த்தனைகளும் இடம்பெற்றது.

சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை நிர்வாகிகளின்வேண்டுகோளின் பேரில் சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல், மஸ்ஜிதுல் தக்வாஜூம்ஆப் பள்ளிவாசல், மஸ்ஜிதுல் அக்கபர் ஜூம்ஆப் பள்ளிவாசல், மாளிகைக்காடுமஸ்ஜிதுல் ஸாலிஹீன் ஜும்ஆப் பள்ளிவாசல் ஆகிய பள்ளிவாசல்களில் இன்று ஜும்ஆத்தொழுகையின் பின்னர் உள்ளூராட்சி மன்ற விவகாரம் தொடர்பாக மக்களை விழிப்படையச்செய்வதுடன், அரசியல் தலைமைகளுக்கு அழுத்தங்களை கொடுக்கும் விதத்தில் குத்பாபிரசங்கம் நிகழ்த்தப்பட்டு தொழுகை முடிவடைந்தவுடன் இறைவனை மன்றாடும் விதத்திலான விசேட துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.

சாய்ந்தமருது மக்களின் நீண்டநாள் கோரிக்கையான தனியான உள்ளூராட்சி சபைக்கோரிக்கையை கடந்த பொதுத் தேர்தலின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தரப்பால்பெற்றுத்தருவதாக வாக்குறுதி பகிரங்கமாக மக்கள் மத்தியில் வழங்கப்பட்டது.

இதற்கு மேலாக கடந்த பொதுத்தேர்தல் பிரச்சாரத்திற்காக கல்முனை வந்த நாட்டின் பிரதமர்ரணில் விக்கிரமசிங்கவினாலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியிலும் அவரதுவாயாலும் 'சாய்ந்தமருத்துக்கு தனியான உள்ளுராட்சி சபை உருவாக்கித் தரப்படும்' என்றுவாக்குறுதிகள் வழங்கப்பட்டன.

இதனைப் பெற்றுக்கொடுப்பதற்கான பல முஸ்தீபுகளை முஸ்லிம் காங்கிரஸ் தரப்பினர்மேற்கொண்டாலும்; இதன் செயற்பாடுகள் இதுவரை சோபை இழந்த காணப்படுகின்றது.இதனால் சாய்ந்தமருது மக்கள் மத்தியில் இக்கோரிக்கை நிறைவேறுமா? என்ற சந்தேகப்பார்வை நாளுக்கு நாள் வலுவடைகின்றது.

தற்போது கல்முனை மாநகரசபை உட்பட ஏனைய உள்ளுராட்சி சபைகளும்கலைக்கப்பட்டுள்ள நிலையிலும், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் உள்ளுராட்சி மன்றங்களுக்கானஎல்லை நிர்ணயங்கள் பூர்த்தியடையவுள்ள நிலையிலும், 2017 முதல் காலாண்டுக்குள்உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெறும் என்ற ஜனாதிபதியின் அறிவிப்பும்வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினர்இக்கோரிக்கையினை நிறைவேற்றிக் கொள்ளுமுகமாக பல்வேறு தீவிர நடவடிக்கைகளைமேற்கொள்ளவுள்ளனர். இதனடிப்படையில் இதன் முதற்கட்டமே இன்றைய குத்பாபிரசங்கமும், விசேட துஆப் பிரார்த்தனையுமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -