ஏ.எஸ்.எம்.ஜாவித்-
முஸ்லிம் மீடியா போரத்தின் மாவட்ட இணைப்பாளர்களுக்கான கூட்டம் நேற்று சனிக்கிழமை (23) அமைப்பின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் மாளிகாவத்தை சபாப் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
தற்போதைய தேசிய நல்லிணக்க அரசாங்கத்தில் தகவல் அறியும் சட்டம் கொண்டு வரப்பட்டு அதனை அமுல்படுத்தும் நடவடிக்கைகள் பல்வேறு மட்டத்திலும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த விடயத்தினை நாட்டில் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் பொருட்டு அதனை ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கும் தெளிவு படுத்தும் நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன. அதன் ஒரு கட்டமாக முஸ்லிம் மீடியா போரத்தின் அங்கத்தவர்களான ஊடகவியலாளர்களுக்கும் அதனை தெளிவுபடுத்தி அதன் மூலம் ஏனைய ஊடகவியலாளர்களுக்கும் பொது மக்களுக்கும் கொண்டு செல்லும் பொருட்டு அரசாங்க தகவல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் எம்.அலி ஹஸன் அவர்களினால் அரசாங்கத்தின் தகவல் அறியும் சட்ட மூலம் தொடர்பான விளக்கம் இன்று அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பதில் பொதுச் செயலாளர் சாதிக் சிஹான், பொருலாளர் எம். பாயிஸ் உள்ளிட்ட போரத்தின் மத்திய குழு உறுப்பினர்கள் மற்றும் நாடு பூராகவும் உள்ள முஸ்லிம் மீடியா போரத்தின் மாவட்ட இணைப்பாளர்கள் கலந்து கொண்டு தகவல் அறியும் சட்ட மூலம் தொடர்பான தெளிவினைப் பெற்றுக் கொண்டனர். இதன்போது எதிர் வரும் ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி நடைபெறவிருக்கும் போரத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் தொடர்பான விடயங்களும் கலந்துரையாடப்பட்டு அதனை நடத்துவது தொடர்பான முடிவுகளும் எடுக்கப்பட்டன.