அபு அலா , சப்னி அஹமட்-
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஐ.எல்.அப்துல் மனாப் எழுதிய 'அர்த்தமானால்' என்ற சின்னக்கதைகள் நூல் வெளியீட்டு விழா இன்று (17) அட்டாளைச்சேனை ஜும்ஆப் பள்ளிவாயல் கூட்டமண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வு திருகோணமலை மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் தலைமையில் இடம்பெற்றது. இதில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்தார்.
கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யு.எல்.ஏ.அஸீஸ், மு.காவின் ஸ்தாபகச் செயலாளர் எஸ்.எம்.ஏ.கபுர் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.