எஸ்.என்.எஸ்.றிஸ்லி-
இன்று (2016.07.25) மன்னார் மாவட்ட இளைஞர்களின் அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடலொன்று வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்களது காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.
"இளைஞர்களின் எழுச்சியே சமூகத்தின் வளர்ச்சி" என்னும் தொனிப்பொருளில் றிப்கான் பதியுதீன் அவர்களினால் ஆற்றப்படும் சேவையினை அனைத்து இளைஞர்களும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் விளையாட்டு, வேலைவாய்ப்பு, உயர் கல்வி போன்றவற்றின் மூலம் இளைஞர்களின் வாழ்வினை மேம்படுத்துவதற்காகவும் இத்திட்டத்தினை தொடர்ந்தும் நடைமுறைக்கு கொண்டுவரும் பொருட்டு இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
மேலும் மாதத்தில் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை இளைஞர்களின் அபிவிருத்தி சம்பந்தமாக கலந்துரையாடல் நடாத்தப்படும் எனவும் தீர்மானிக்கப் பட்டுள்ளது.
இக் கலந்துரையாடலில் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற வன்னி மாகாணப் பணிப்பாளர் என்.எம்.முனவ்வர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களது இணைப்புச் செயலாளர் முஜாஹித், மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் கே. ரஜீவன் (அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மக்கள் தொடர்பு அதிகாரி), இலங்கை இளைஞர் கழக சம்மேளனத்தின் சூழல் பாதுகாப்பு பிரிவின் தலைவரும், மன்னார் மாவட்டத்தின் தேசிய சம்மேளன பிரதிநிதி கணேசலிங்கம் கஜிதரன் ( மாந்தை மேற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இளைஞர் அணி இணைப்பாளர்) ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.