அரசியலமைப்பு மாற்றம் தொடர்பான கலந்துரையாடல் - முஸ்லிம் சமுக நலன் விரும்பிகளுக்கு அழைப்பு

ரசியல் அமைப்பு மாற்றம் தொடர்பான கலந்துரையாடல் நாளை வியாழக்கிழமை (28) அக்கரைப்பற்று TFC ஹொட்டலில் நடைபெறவுள்ளது.

மாலை 04 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்நிகழ்வில் அரசியல் அமைப்பு மாற்றம் தொடர்பான முக்கிய விடயங்கள் பேசப்படவுள்ளன.

இக்கூட்டத்திற்கு முக்கிய அதிதிகளாக சட்டத்தரணி மர்சூம் மௌலானா, பேராசிரியர் அமீர் அலி மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தவிசாளர் சேகு இஸ்ஸதீன் ஆகியோர் பங்கு கொள்ளவுள்ளனர்.

நாளை நடைபெறவுள்ள இந்நிகழ்வு முகநூல்கள் மற்றும் முஸ்லிம் இணையத்தளங்கள் வாயிலாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.ஆஸாத் - சட்டக்கல்லூரி

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -