மட்டக்களப்புக்கு விஜயம் செய்த ஜனாதிபதிக்கு தான் அழைப்பு விடுத்தும் மங்களராமய விகாரைக்கு வருகை தராதமையால், மங்களராம விஹாரையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயர் பொறிக்கப்பட்டிருந்த நினைவு கல்லை, சுமனரத்ன தேரர் சிலசால் அடித்து நொறுக்கியுள்ளார்.
மட்டக்களப்பில் மறுசீரமைக்கப்பட்ட இலங்கை விமானப்படையின் விமான நிலைய ஓடுபாதையை திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று மட்டக்களப்புக்கு விஜயம் செய்திருந்தார்.
இந்நிலையில் மட்டக்களப்பு மங்களராமய விஹாராதிபதி வண. அம்பிட்டியே சுமனரத்ன தேரர், தன்னுடைய விஹாரைக்கு விஜயம் செய்யுமாறு அழைப்புவிடுத்தார்.
எனினும், அங்கு வருவதற்கு தனக்கு நேரமில்லை என்று ஜனாதிபதி மறுப்பு தெரிவித்தமையால் கடும் கோபமடைந்த தேரர், விஹாரையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயர் பொறிக்கப்பட்டிருந்த நினைவு கல்லை சிலசால் அடித்து நொறுக்கியுள்ளார்.