ஜனாதிபதியின் நினைவு கல்லை இடித்து உடைத்த தேரர்..!

ட்டக்களப்புக்கு விஜயம் செய்த ஜனாதிபதிக்கு தான் அழைப்பு விடுத்தும் மங்களராமய விகாரைக்கு வருகை தராதமையால், மங்களராம விஹாரையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயர் பொறிக்கப்பட்டிருந்த நினைவு கல்லை, சுமனரத்ன தேரர் சிலசால் அடித்து நொறுக்கியுள்ளார்.

மட்டக்களப்பில் மறுசீரமைக்கப்பட்ட இலங்கை விமானப்படையின் விமான நிலைய ஓடுபாதையை திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று மட்டக்களப்புக்கு விஜயம் செய்திருந்தார்.

இந்நிலையில் மட்டக்களப்பு மங்களராமய விஹாராதிபதி வண. அம்பிட்டியே சுமனரத்ன தேரர், தன்னுடைய விஹாரைக்கு விஜயம் செய்யுமாறு அழைப்புவிடுத்தார்.

எனினும், அங்கு வருவதற்கு தனக்கு நேரமில்லை என்று ஜனாதிபதி மறுப்பு தெரிவித்தமையால் கடும் கோபமடைந்த தேரர், விஹாரையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயர் பொறிக்கப்பட்டிருந்த நினைவு கல்லை சிலசால் அடித்து நொறுக்கியுள்ளார்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -