திருகோணமலை சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜெயந்திபுர காட்டுப்பகுதியில் சூது விளையாடிய குற்றச்சாட்டின் பேரில் 6 பேரை நேற்று மாலை கைது செய்துள்ளதாக சூரியபுர பொலிஸார்தெரிவித்ததோடு இவர்களை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்துள்ளதோடு கந்தளாய் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற் கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
ஜெயந்திபுர காட்டுப்பகுதியில் சிலர் சூது விளையாடிக் கொண்டிருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த காட்டுப்பகுதியில் சுற்றி வளைத்து தேடுதல் நடாத்திய போது இவர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.