என்­னுடன் அப்பம் சாப்­பிட்ட பாம்­பு­களை அடை­யாளம் காண முடி­யாது போன­மையே எனது வீழ்ச்­சிக்கு கார­ண­ம் - மஹிந்த

குரக்கன் மாவில் செய்த உணவு வகை­களை உண்டு பழக்­கப்­பட்ட தனக்கு பாம்­பு­க­ளுடன் அப்பம் சாப்­பிட்டு பழக்கம் இல்­லை­யென முன்னாள் ஜனா­தி­ப­தியும் குரு­ணாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்ளார்.

குரு­ணாகல் குளி­யாப்­பி­ட்டி­யில் இடம்­பெற்ற மக்கள் சந்­திப்­பொன்றில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.

அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

குரக்கன் மாவில் செய்த உணவு வகை­ களை உண்டு பழக்­கப்­பட்ட எனக்கு பாம்­பு­க­ளுடன் அப்பம் சாப்­பிட்டு பழக்கம் இருக்­க­வில்லை. அவ்­வாறு என்­னுடன் அப்பம் சாப்­பிட்ட பாம்­பு­களை அடை­யாளம் காண முடி­யாது போன­மையே எனது வீழ்ச்­சிக்கு முக்­கிய கார­ண­மா­னது.

அத்­துடன் நான் ஆரம்­பித்து வைத்த மஹிந்­தோ­தய திட்­டங்­களில் இருந்த பெயர் பதா­கைகள் அகற்­றப்­பட்­டுள்­ளன. பெயர் மாற்­றப்­ப­டு­வது குறித்து கவ­லை­யில்லை. ஆனால் அந்த வளங்­களை மாண­வர்­களின் பாவ­னைக்கு சீர­மைத்து கொடுக்க வேண்டும். அத்­துடன் குரு­ணாகல் மல்­லி­யத்­தேவ பாட­சா­லைக்கும் மஹிந்த மன்­றத்தின் கீழ் எனது சொந்த செலவில் நீச்சல் தடாகம் அமைத்­துக்­கொ­டுத்­தி­ருந்தேன். அதனை அர­சாங்க தரப்­பினர் அறி­யாமல் இல்லை. ஆனால் எனக்கு திறப்பு விழா­விற்கு அழைப்பு விடுக்­கப்­ப­ட­வில்லை.

இந்த அர­சாங்­கத்­தினால் பழிவாங்கல் முயற்சிகளுக்காக எம்மை சிறையில் அடைக்க முடியும். ஆனால் மக்கள் மனங் களை சிறையிலடைக்க முடியாது என தெரி வித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -