கடற்படை அதிகாரியுடன் முதலமைச்சர் நடந்து கொண்ட விதத்தை நியாயப்படுத்த முடியாது..!

றிசாத் ஏ காதர்-
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தனது நல்ல நண்பர் என்றபோதிலும், கடற்படை அதிகாரியுடன் அவர் நடந்து கொண்ட விதத்தை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்று பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நேற்றிரவு கலந்து கொண்டபோதே பாதுகாப்புச் செயலாளர் இதனைக் கூறினார்.

முதலமைச்சர் ஹாபிஸ் நஸீருடன் - தான் தொலைபேசியில் உரையாடியதாகவும், அதன்போது, அவர் நிதானமாகச் செயற்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிவித்ததாகவும் பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

மேலும், இதுதொடர்பில் பகிரங்கமாகவோ அல்லது தனிப்பட்ட ரீதியிலோ முதலமைச்சர் மன்னிப்புக் கோருவதில் எந்தவிதமான தவறுகளும் இல்லை என்றும் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -