பாலமுனையில் விபத்து - ஒருவர் பலி

அடையாளப்படம் 
அம்பாறை பாலமுனை பிரதான வீதியில் இடம்பெற்ற லொறி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளது.

பாலமுனை மாவட்ட வைத்தியசாலைக்கு முன்பாக வீதியை கடக்க முற்பட்டவரை அக்கரைப்பற்றுப் பிரதேசத்திலிருந்து கல்முனைப் பிரதேசம் நோக்கிச்சென்று கொண்டிருந்த லொறி மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பாலமுனை நான்காம் பிரிவைச் சேர்ந்த 48 வயதுடைய ஏ.எல்.வஹாப்தீன் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

மேலும் விபத்துடன் சம்மந்தப்பட்ட லொறியின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -