வெள்ளவத்தை மசாஜ் நிலையத்தில் எயிட்ஸ் நோயுடன் தாய்லாந்து பெண்கள் - அதிர்ச்சி தகவல்

டந்த சில தினங்களுக்கு முன்னர் வெள்ளவத்தை பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றவளைப்பின் போது அடையாளம் காணப்பட்ட விபசார விடுதியிலிருந்த இரண்டு தாய்லாந்து பெண்களையும் எதிர்வரும் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

குறித்த இருவருக்கும் எச்ஐவி தொற்று ஏற்பட்டுள்ளதாக மருத்துவ பரிசோதனைகளின் மூலம் தெரியவந்ததையடுத்தே அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளவத்தையில், மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இடம்பெற்ற விபசார விடுதியை, கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொலிஸார் முற்றுகையிட்டிருந்தனர். இதன்போது, இரண்டு தாய்லாந்து பெண்களும் உள்ளூரைச் சேர்ந்தை 7 பெண்களும் குறித்த விடுதியின் முகாமையாளரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்கள் கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, விடுதியின் முகாமையாளருக்கு 50,000 ரூபாய் அபராதம் விதித்த நீதவான், அவரை 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளில் செல்வதற்கு அனுமதியளித்தார்.

மேலும் கைது செய்யப்பட்டிருந்த உள்ளூரைச் சேர்ந்த 7 பெண்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

எனினும், தாய்லாந்து பெண்கள் இருவரையும் மருத்துவ பரிசோனைக்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், மருத்துவ பரிசோதனைகளில் குறித்த இரண்டு பெண்களுக்கும் எச்ஐவி தொற்று இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்ததையடுத்து அவ்விருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டள்ளார்.
ஒரு விழிப்புணர்வுக்காக இதனை அதிகம் பகிருங்கள்..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -