அமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ளஅந்தஅனுதாபச் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது,
மறைந்த மூத்தஅரசியல்வாதிமர்ஹூம் எம்.எச்.முஹம்மத் அரசியலிலும்,ஆன்மீகத்திலும்,சமூகவாழ்விலும் பன்முகபரிமாணம் கொண்டவராகமிளிருவதோடு,எந்தவிதமானசவால்களையும்துணிச்சலுடன் எதிர்நோக்கக் கூடியவராகவும் விளங்கினார்.அதற்குஅவரது 95 வருடகாலவாழ் நாளில் நிறையசான்றுகள் உள்ளன.
இலங்கைஅரசாங்கத்தில்பல்வேறுஅமைச்சுக்களுக்குப்பொறுப்பானஅமைச்சராகவும்,பாராளுமன்றத்தின் 14 ஆவதுசபாநாயகராகவும் பதவிவகித்;த மர்ஹூம் எம்.எச்.முஹம்மத்,கொழும்புமாநகரசபையைஅலங்கரித்தமுதல் முஸ்லிம் மேயராகவும் வரலாற்றில் தடம்பதித்துள்ளார்.
1956 ஆம் ஆண்டுநிறைவேற்றப்பட்டவக்ப் மற்றும் தர்மச் சொத்துசட்டத்திற்கு 1982 ஆம் ஆண்டில் தாம் கொண்டுவந்ததிருத்தத்தின்ஊடாகஅச்சட்டத்தின் கீழ் இருந்தபள்ளிவாசல்களோடு,தக்கியாக்கள்,சாவியாக்கள்,தர்ஹாக்கள் என்பனவற்றையும் உள்வாங்கியதன் ஊடாக,2012 ஆம் ஆண்டுக்குபிறகு இந்நாட்டில் உக்கிரமடைந்தமுஸ்லிம்களுக்கெதிரானஅரசபின்புலத்துடனானவன்செயல்களின் விளைவாகமுஸ்லிம் சமயத் தளங்களுக்குஏற்படுத்தப்பட்டசேதங்களுக்குசட்டரீதியானமுக்கியத்துவத்தைவழங்குவதற்குபெரிதும் வாய்ப்பாகஅமைந்ததைநாம் இந்தசந்தர்ப்பத்தில் நன்றியறிதலோடுநினைவு கூர்வதற்குகடமைப்பட்டுள்ளோம்.
இஸ்லாமியநிலையத்தின்ஆயுள்காலத் தலைவராகவும் விளங்கியமர்ஹூம் எம்.எச்.முஹம்மத்,'ராபியத்துல் ஆலமுல் இஸ்லாமி'என்றஉலக இஸ்லாமியஅமைப்பின் இலங்கைபிரதிநிதியாகவும் தொடர்ந்துபணியாற்றுவந்தார்.அதன் மூலம் அவரதுசன்மார்க்கபணிகளுக்குஅரபுஉலகத்தினதும், இஸ்லாமியநாடுகளினதும் அங்கீகாரம் கிடைத்ததோடு,சர்வதேசரீதியாகவும் நன்கறியப்பட்டார்.
இலங்கையில் 1980 ஆம் ஆண்டில் ஹிஜ்ரி 1400 ஆண்டுநிறைவைஒருதேசியவிழாவாகவெகுகோலாகலமாககொண்டாடியபெருமைஅன்னாரையேசாரும். திருக்குர்ஆனுக்கும் அவர் அதிகமுக்கியத்துவமளித்தார்.
தாம் பிரதிநிதித்துவப்படுத்தியபெரும்பாலும் சிங்களவாக்காளர்களைகொண்டபொரளைதொகுதியின் அசைக்கமுடியாதஅரசியல்வாதியாகவும்அவர் விளங்கினார்.
அன்னாருக்;கு எல்லாம் வல்லஅல்லாஹ் மேலான ஜன்;னத்துல் பிர்தௌஸ் என்றசுவனவாழ்வைஅருள்வானாக.