இந்த நாட்டின் கல்வி சீர்திருத்ததையும் நல்ல முறைகளை செய்தவர்கள்-அரசியல்வாதிகள்- ஹக்கீம்

இக்பால் அலி-

ரசியல்வாதிகள் தான் இந்த நாட்டின் கல்வி சீர்திருத்ததையும் நல்ல முறைகளை செய்திருக்கிறார்கள். அதிலே பிழைகளையும் விட்டுள்ளார்கள். விட்ட தவறுகளினால் நிறைய பாராதூரமான விளைவுகளையும் இந்த நாடு சந்தித்து இருக்கிறது. அதேநேரம் அதன் மூலமாக பின்தங்கிய பிரதேசங்களின் அவற்றிற்கான வாய்ப்புக்கள் கூடி இருக்கிறது. ஆனால் வாய்ப்புக்களைக் கூட்டுவதற்காக செய்யப்பட்ட தரப்படுத்தல் முறையும் மாவட்ட ரீதியான தரப்படுத்தலும் நியாயத்தைச் செய்ய வில்லை என்பதை நாங்கள் மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டிய விடயம். 




இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்து புதிய தலைமுறையை நல்ல தேர்ச்சியுள்ள ஆளுமையுள்ள தலைமுறையாக மாற்ற வேண்டும் என்றால் தனியோ அரசியல் கொள்கை வகுப்பாளர்களை மட்டும் நம்பி எம்முடைய கல்வி சீர்திருத்தம் சம்மந்தமாக அவர்களிடம் மட்டும் விட்டுப் போட்டு இருக்க முடியாது. அது சம்மந்தமாக நாங்கள் மாற்றமாக சிந்திக்க வேண்டும். அதன் மூலம் தான் நாம் புதுயுகத்திற்கு முகம் கொடுக்கலாம் என்று நீர் வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் நகர திட்டமிடல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

சாபிர் மன்சூர் பவுன்டேசன் ஆதரவில் 2015 ஆம் ஆண்டு க. பொ. சாதாரணப் பரீட்சையில் பிங்கிரி தேர்தல் தொகுதியிலுள்ள முஸ்லிம் பாடசாலை மாணவர் மாணவிகளைப் பாராட் கௌரவிக்கும் நிகழ்வு திவுரும்பொல பாடசாலை மைதானத்தில் நிறுவனத்தின் ஸ்தாபகப் பணிப்பாளர் சாபிர் மன்சூர் தலைமையில் 24-04-2016 நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட நீர் வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் நகர திட்டமிடல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அங்கு இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்

இந்த நாட்டின் கல்வி வரலாற்றில் முஸ்லிம்களுடைய கல்வித் துறையின் ஈடுபாட்டை வகுத்தெடுப்பதற்காக பலவிதமான செயற்பாட்டை ஆரம்ப காலத்திலிருந்து எமது முன்னொடிகள் செய்து வந்து இருக்கின்றார்கள். இதன் விளைவாகத்தான் இன்று நாடு முழுவதும் இருக்கின்ற 10000 பாடசாலைகளில் 720 முஸ்லிம் பாடசாலைகள் என்கிற அடிப்படையிலே இன ரீதியாகப் பாடசாலைகளை அமைத்துக் கொள்ளக் கூடிய ஒரு நிலவரம் இன்று நாட்டிலே இருக்கிறது.

அடிக்கடி கல்வி சீர்திருத்தம் சம்மந்தமாக பாராளுமன்றத்திலே கலந்துiராயடல்களும் விவாதங்களும் நடக்கிற போது அவ்வப் போது இன ரீதியாக பாடசாலைகளை பிரித்து வைப்பது தொடர்பாக பாதகமானதாகவும் சாதகமானதாகவும் என சில சமயங்களில் பேசப்படும். இந்த நாட்டிலே இனப்பிரச்சினை உக்கிரமடைவதற்கு இப்படி எல்லாம் நாங்கள் மொழி ரீதியாகவும். கலாசார ரீதியாகவும் தனித்தனியான அடையாளங்களை எங்களுக்குள் வகுத்துக் கொண்டதைக் கூட ஒரு சாரார் குறைகாணுகின்ற நிலவரங்களை நாம் அடிக்கடி பார்த்திருக்கின்றோம்.

இஸ்லாத்திலே மார்க்கக் கல்வி லௌகீகக் கல்வி என்று பிரித்தாள வேண்டுமா என்று கூட பலரும் விவாதித்து வந்திருக்கின்றார்கள். அரபுக் கல்லூரிகளில் மத்ரஸாக்களில் பாட விதானங்களில் வெறும் ஆன்மீகக் கல்வியை மாத்திரம் போதிக்காமல் தொழில் பயிற்சியைக் கொடுக்கக் கூடிய மாதரி அதேநேரம் லௌகீக வாழ்க்கைக்குத் தேவைப்படுகிற அம்சங்களையும் சேர்த்து படிக்க வேண்டும் என்ற பாட விதான மாற்றங்கள் கடந்த ஓரிரு தசாப்த காலமாக மிக வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இப்படியான பரிமாண மாற்றங்களுக்கு மத்தியில் முஸ்லிம் மாணவிகளுக்காக ஆன்மீகக் கல்வியோடு சேர்த்து அவர்கள் பொதுப் பரீட்சைகளுக்குத் தோற்றி தேர்ச்சியடைக் கூடிய மாதரியான புதிய பாடவிதானங்களோடு தனியான கலாசாலைகள் அமைக்கப்படுகின்ற சூழலையும் சில இடங்களில் பார்க்கின்றோம். நிறையப் பெற்றோர்கள் தங்களுடைய மாணவிகளை ஆறாம் வகுப்போடு பாடசாலையை விட்டு விலக்கி இப்படியான புதிய கலாசலைக்கு கொண்டு போய் சேர்க்கிறார்கள். வருங்காலத் தாய்மார்களாக இருக்கின்ற எங்களுடைய பெண் பிள்ளைகளை முழு இஸ்லாமிய விழுமியங்களோடு வளர்த் தெடுப்பதற்கான ஒரு வித்தியாசமான புதிய பாடநெறிகளை இன்று எங்களுடைய பிள்ளைகள் தனியாதொரு முயற்சிகளின் மூலம் சமூகம் வடிவமைக்கப்பட சில இடங்களிலே இவ்வாறான கலாசலைகள் அமைந்துள்ளன.

இந்தியாவுக்குச் சென்றால் தமிழ் நாட்டில் தனியான முயற்சியில் நடக்கிற பாடசாலைகளுடைய தொகையும் கூடிக் செல்வது மட்டுமல்ல அதற்கு இருக்கிற கிராக்கியும் கூடிக் கொண்டு செல்கிறது. அரச பாடசாலைகளில் இருக்கிற அவதானம் படிப்படியாக வேறு திக்குகளிலே உள்ளன. நாங்கள் கொழும்புக்கு சென்று பார்த்தால் சர்வதேச இஸ்லாமியப் பாடசாலை இது பெரிய தொகுதியாக வளாந்து கொண்டு போகிறது. ஏனென்றால் கொழும்பு போல பொதுவான தரமான பாடசாலைகளிலே இடம் எடுப்பது என்பது மிகக் கஷ்டத்திற்குரிய விடயம். இதற்கிடையிலேதான் புலமைப் பரிசில் வழங்குதல் போன்ற இவ்வாறான விடங்கள் தான் ஏதாவது தரமான பாடசாலைக்குச் சென்று அதன் மூலம் அவர்களுக்கு வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வழி வகைகள் அமைந்தாலும் எல்லாருக்கும் அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை.

புல இடங்களிலே சமூக நலன்விரும்பிகள் வௌ;வேறாக புதிய உபாயங்களோடு கல்வித் துறையில் புதுவிதமான மறுமலர்ச்சியை உருவாக்கி வருகிற காலகட்டத்திலே நாங்கள் வாழ்கிறோம்.

இந்த நாட்டிலே இரண்டு பெரிய கிளர்ச்சிகளுக்கு நாங்கள் முகம் கொடுத்து இருக்கின்றோம். சிங்கள சமூகத்து இளைஞர்கள் ஆயுதம் தாங்கிப் போராடி இருக்கின்றார்கள். ஏறத்தாள 10000க்கும் மேற்பட்ட இளைஞர்களைப் பலி கொண்ட வன்முறையின் மூலம் இந்த நாட்டின் அரசியல் கலாசாரத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என ஆயுதம் தாங்குவதற்கு கல்வித் துறையில் காணப்பட்ட ஒரு பாராட்சமே இந்த ஆயுதம் தாங்குவதற்கு ஒரு காரணமாகும்.

தமிழ் இளைஞர் ஆயுதம் தாங்குவதற்கும் போராடுவதற்கும் 70 களிலே அறிமுகப்படுத்தப்பட்ட பல்லைக்கழக நுழைவு சம்மந்தமாக தரப்படுத்தல் முறையும் காரணமாக அமைந்தது என்று பேசப்படுகிறது. எனவே கல்வி வாய்ப்பு சம்மந்தமான விடயத்தில் இந்த நாடு மிகப் பெரிய தவறுகளையும் செய்திருக்கிறது. அதில் தவறு இல்லை. சரியாகச் செய்தோம் எனவும் வாதிடுவோர்கள் இருக்கிறார்கள்.

ஆனால் தரப்படுத்தல் துறையை அறிமுகப்படுத்தியது எங்களுடைய முன்னாள் கல்வி அமைச்சர் பதியுதீன் மஹ்மூத் அவர்கள். அவருடைய காலத்திலேதான் அன்றைய பொது முன்னணி அரசாங்கம் தரப்படுத்தல் முறையை அறிமுகப்படுத்தியதன் மூலம் தான் பின்தங்கிய மாட்டங்களில் இருப்பவர்களுக்கு பல்கலைக்கழக நுழைவுக்கான வாய்ப்புக்கள் கிடைத்தன . ஆனால் அதன் மூலம் யாழ்ப்பாணத்தில் தீபகற்பத்திலே இருக்கின்ற மாணவர்கள் படுமோசமாக அது வரையும் அவர்களுக்கு இருந்த பல்கலைக்கழக நுழைவு குறித்த திறமை அடிப்படையில் நுழைவுக்கான வாய்ப்பு கொஞ்சம் குறைந்து போய் விட்டது. ஆனால் தமிழ்களை யாழ்ப்பாணத்தில் பாதித்தாலும் கிளிநொச்சியிலும் முல்லைத் தீவிலும் மட்டக்களபப்பிலும் மான்னாரிலும் இருக்கின்ற தமிழ் மாணவர்களுக்கான வாய்ப்புக்களையும் கதவுகளையும் நிறையத் திறந்து விட்டன என்ற உண்மையைப் பற்றி பேசுகின்றார்கள்.

ஆனால் வெட்டுப் புள்ளி எனக் கணிப்பீடு செய்யும் போது பின் தங்கிய மாவட்டங்கள். அதாவது மாவட்டங்கள் எனப் பார்க்கின்ற போது தரப்படுத்தலிலும் பிழை இருக்கிறது. ஒரே மாட்டத்தில் தரப்படுத்தல் என்பது பிழையான விடயம். குருநாகல் மலிய தேவப் பாடசாலையையும் திவுரும் பொல முஸ்லிம் பாடசாலையையும் ஒரே தட்டில் போட்டுப் பார்க்க முடியாது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பாடசாலைகளுக்கிடையே வித்தியாசம் இருக்கிறது. கொழும்பு ரோயல் கல்லூரிக்கும் அதன் பக்கத்தில் இருக்கின்ற அல் இக்பால் பாடசாலைக்குமிடையியே மலைக்கும் மடுவுக்கும் வித்தியாசம். ஆனால் இல் இக்பால் அல்லது அல் அமீன் பாடசாலையில் படிக்கிற மாணவர்களும் ரோயல் படிக்கிற மாணவர்களும் பல்கலைக்கழக நுழைவுக்கு ஒரே இஸட் புள்ளி எடுக்க வேண்டும். எனவே இதிலும் பிழை இருக்கிறது. எனவே இப்படியான குறைபாடுகளுக்கு மத்தியில் தான் எங்களுடைய பாடசாலைத் தொகுதிகளில் கல்வி முறைமை வகுக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் மறு சீரமைப்புச் செய்ய வேண்டும், புதிய சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற முயற்சிகளைச் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

நான் மொத்தத்தில் கூற வருதென்றால் தனியே அரசாங்கத்தையும் அரச கொள்கை வகுப்பார்ளர்களையும் நம்பி எங்களுடைய கல்வித் துறையை பற்றி நாங்கள் உதாசீனமாக இருக்க முடியாது. இதில் நாம் சற்று வித்தியாசமாக சமூக நலன் விரும்பிகள் கல்வியலாளர்கள் ஒன்று பட்டு அங்கிருக்கிற இந்த நிலவரங்களை அதாவினத்து கவனத்தில் எடுத்து புதிய உக்திகளையும் உபாயங்களையும் பாவித்து மாணவர்களை ஊக்குவிப்பதும் பயிற்று விப்பதும் முக்கிய அம்சமாகும். அவர்களை பரீட்சைகளுக்கு பயிற்று விப்பதே ஒரு தனியான கலை.

முன்னைய காலத்தில் ஆசியர்களுக்கு இருந்த சமூக அந்தஸ்தே வித்தியாசமானது. ஆசிரியர்களுடைய சமூக அந்தஸ்து கூட காலப் போக்கிலே மாற்றம் அடைந்து விட்டது. ஏனென்றால் வாழ்க்கைச் செலவு என்பது அவர்களுக்கு கொடுக்கிற சுமை வித்தியாசமாகி விட்டது. எனவே ஆசிரியர்கள் ஆசிரியர் தொழிலில் மட்டும் தங்கி தங்களுடைய ஜீவனோபாயத்தை கொண்டு செல்வது கஷ்டம். எனவே அதற்கு மாற்றமாக பகுதி நேரத்தில் ஏதாவது ஒன்று செய்யா விட்டால் தங்களுடைய குடும்பச் சுமையை சமாளித்துக் கொண்டு போக முடியாத சூழல் இருக்கிறது.

கடந்த கால ஆசிரியர்கள் இலவசமாக பகுதி நேர வகுப்புக்களை நடத்தி செய்த காலம் இப்பொழுது கொஞ்சம் குறைந்து விட்டுப் போய் விட்டது. எமது பகுதியில் அப்போழுது தமிழ் ஆசிரியர்கள் நிறையப் பேர் இருந்தார்கள். இப்போழுது மருந்துக்கும் காண முடியாது.

இந்த நாட்டின் இனப்பிரச்சனை இன்று தமிழர்கள் தமிழர்கள் பிரதேசங்களிலும் முஸ்லிம்களை முஸ்லிம்களுடைய பிரதேசங்களிலும் சிங்களவர்கள் சிங்களவர் பிரதேசங்களிலும் தனிமைப்படுத்தி பிரித்தெடுத்து விட்டது. இதில் உருவாக்கத்திற்கான பின்புலம் அரசியல் ரீதியான பலவிதமான சிக்கல்கள் ஏற்பட்டதால் நாங்கள் எல்லாம் பிரிந்து சென்று விட்டார்கள்.




அதிபர்களுடைய செயல்பாடுகள். எங்களுடைய பாடசாலைகளுடைய நிhவாகம் நிறையச் சிக்கல்கள் இருக்கின்றன. பாடசாலை நிர்வாகம் செய்வது என்பது எல்லோருக்கும் செய்ய முடியாது.

நாங்கள் பெறுபேறுகளைக் கூட்டுவதில் காட்டுகிற அவதானத்தில் பாடசாலையின் நிர்வாகத்திற்கும் பங்கு இருக்கிறது. பல பாடசாலைகளில் நிhவாக சீர்கேடு இருப்பதற்கான காரணம். அதற்குள்ளே புதுவிதமான அரசியல் இருக்கிறது. அதற்குள்ளே போட்டி. இவை எல்லாம் மனித வழமை. இதை மாற்ற முடியாது. அதிபரைச் சுற்றி ஒரு குழு அமைந்து விடும். அது அதிபரை நெருங்க விடாது. இவ்வாறு பல இடங்களில் பிரச்சினை இருக்கிறது. நிர்வாகம் என்பது நிர்வாகத் திறமை என்பது எல்லோருக்கும் வாய்க்கப் பெறுகிற ஒரு விடயமல்ல. பாடசாலைகளிலுள்ள அதிபர்களைப் பயிற்று விப்பதற்கு என ஒரு சரியான திட்டம் இல்லை. நாங்கள் அதிபர்களை தரப்படுத்துதல் என்ற விடயத்திலும் ஒவ்வொரு அரசாங்கம் வந்தாலும் அதிபர் தரப்படுத்தலிலும் நியமனம் வழங்குவதிலும் பலவீனமடைந்த நிலை காணப்படுகிறது. பாராட்சம் அநியாயங்கள் நடைபெறுகிறது.

கல்வி சீர்த்திருத்தம் என்பது முடிவில்லாத ஒன்று எந்த நேரமும் எந்த அரசாங்கமும் ஒவ்வொரு பிழையைக் கண்டு பிடித்த திருத்துதல் வேண்டும். தொழில் நுட்பக் கல்விக்கு என்று நாங்கள் பாட விதானத்தைத் தயாரித்து நடடைபற்றுக் கொண்டு இருக்கிறது. ஆனால் படிப்பிப்பதற்கு ஆளில்லை. இதை ஏன் செய்கின்றோம் எனில் எல்லோருக்கும் பலக்லைக்கழகம் நுழைய முடியாது. எங்களுடைய தொழில் சந்தையில் தேவைக்கு ஏற்ப படித்தவர்கள் குறைவு. பல்லைக்கழக பாட விதானங்களில் இந்தக் கலைப் பிரிவுக்கு செல்லும் தொகையைக் குறைக்க வேண்டும். பல்லைக்கழக நுழைவில் வித்தியாசமான கல்வியைக் கொடுக்க வேண்டும் என்று மாற்றங்களைச் செய்வதற்கான முயற்சிகள் நடந்து கொண்டு இருக்கிறது.

இப்படி எல்லாம் எந்நேரமும் கல்வித் துறையிலான மாற்றம் சீர்திருத்தம் என்பது ஒவ்வொரு கால கட்டத்திலும் வித்தியாசமாக போய் கொண்டிருக்கிற நேரத்தில் சமூகம் சும்மா பார்த்துக் கொண்டிருப்பது பொருத்தமல்ல. நாங்கள் ஒவ்வொரு ஊரிலும் வித்தியாசமாக சிந்திக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வடமேல் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷா, குளியாப்பிட்டிய நீதிமன்றத்தின் பதில் நீதவான் சட்டத்தரணி எம். ஐ. அப்துல்லாஹ், பிங்கிரி தேர்தல் தொகுதிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அமைப்பாளர் மௌலவி எம். எஸ். ஏம். ஷாம் மௌலானா, குளியாப்பிட்டிய நகர சபையின் முன்னாள் உறுப்பினர் ரியாஸ், குளியாப்பிட்டிய பிரதேச சபை உறுப்பினர் இல்ஹாம் சத்தார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -