2015ம் ஆண்டு ஜனவரி மாதம் மகிந்த தேர்தலை அறிவிக்க சுமார் 3 நாட்களுக்கு முன்னர், கொழும்பில் உள்ள மகளீர் பணியகம் ஒன்றுக்கு கண்ணிருடன் ஒரு பெண் வந்திருந்தார்.
அவர் கொடுத்த புகாரில் மகிந்த ராஜபக்ஷவின் மகன் நமால் ராஜபக்ஷ , தன் மீது பாலியல் குற்றம் புரிந்ததாகவும். இதனை வெளியே சொன்னால், என்னை கொன்றுவிடுவேன் என்று மிரட்டுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இதில் கொடுமையான விடயம் என்னவென்றால், நமால் ராஜபக்ஷ தன்னை வல்லுறவுக்கு உட்படுத்தியது போதாது என்று. தனது நண்பர்களுக்கும் தன்னை இரையாக்கியுள்ளார் என்றும் இதனால் அவரது நண்பர்களின் தொல்லை தான் பெரும் தொல்லையாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
மகளீர் விவகாரப் பிரிவினர். மற்றும் அதே கட்டடத்தில் , இயங்கிவந்த மனித உரிமை அமைப்பு குறித்த பெண் கொடுத்த புகாரை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் அடுத்த நாளே முறைப்பாடு அடங்கிய கோவைகள் அனைத்தும் காணமல் போனது. இது யார் செய்த வேலை என்பது தெரியாத விடையம் அல்ல.
இன் நிலையில் குறித்த பெண் கொடுத்த புகாரின் பிரதிகளை கைப்பற்றியுள்ள பொலிசார் தற்போது இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை நடத்த ஆரம்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் நமால் ராஜபக்ஷ , தான் இந்த அரசாங்கத்தை கவிழ்க்காமல் விடமாட்டேன் , என்று மேடையில் கூறினார். இதனால் பெரும் சிக்கலில் மாட்ட உள்ளார் என்று கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
news from : Jvpnews