ஏ.எஸ்.எம்.இர்ஷாத்-
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்குள் நேற்றிரவு கள்வர்கள் புகுந்து தேடுதல் நடத்தியுள்ளனர். இன்று காலை வழமைபோன்று ஊழியர்கள் வேலைக்கு வந்தபோதே திணைக்களத்தின் கதவுகளும் அலுமாரிகளும் திறக்கப்பட்டு கள்வர்கள் உட்செல்லபட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து ஊழியர்கள் பணிப்பாளர் மற்றும் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்தையடுத்து அதிகாரிகள் மருதானை பொலிசாருக்கு இது குறித்து தெரியப்படுத்தினர்.
தற்போது பொலிசார் திணைக்களத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்த மேலதிக விடயம் விசாரணையின் பின்னரே தெரியவரும்.
