கல்விக்காக உடலை விற்கும் மாணவிகள்..!


ப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சியரா லியோனில் கல்விக்காக சிறுமியர் முதல் இளம்பெண்கள் வரை தங்களது உடலை விற்று பணம் தேடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இங்குள்ள பள்ளிகளில் கட்டணமாக ஆண்டுக்கு 40 பவுண்ஸ்கள் வரை வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஏழ்மை காரணமாகவும் அடிப்படை கல்வியை கட்டாயம் முடிக்க வேண்டும் என்பதாலும் பெரும்பாலான இளம் வயது பெண்கள்இந்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் தேவைக்கு அதிகமான பணப்புழக்கம் இருப்பதால் சில பெண்கள் முழுநேர விபச்சாரத்தில் ஈடுபடும் கொடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.பள்ளிப்படிப்புக்கான கட்டணத்தை செலுத்துவதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியரையும் இளம் வயது பெண்களையும் சீரழிக்கும் அவல நிலையும் இங்கு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போதிய விழிப்புணர்வு இல்லாமையால் கருத்தரிக்க நேரிடும் பெண்களை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி ஆண் சமூகம் கைநழுவுவதும், இதனால் தமது குழந்தைக்கும் தமக்கும் என மிக குறைவான ஊதியம் பெறும் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்திலும் பெண்கள் தள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இங்குள்ள பல இளம் வயது பெண்களும் இரவில் பாலியல் தொழில் செய்துவிட்டு பகலில் பள்ளிக்கு செல்லும் மாணவிகளாக உள்ளனர். இரவு முழுவதும் கண்விழித்தால் ஒரு இளம் வயது பெண்ணால் 9 பவுண்ஸ்கள் வரையே ஈட்ட முடியும் என்ற நிலையில், அந்த 9 பவுண்ட் பணத்தில் உணவு, உடை, புத்தகம், பள்ளி சீருடை மற்றும் கல்வி கட்டணம் என அனைத்தையும் சமாளித்தாக வேண்டும்.

இதுபோன்ற நிலையில் தவிக்கும் இளம் வயது பெண்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தும் அமைப்பு ஒன்று தெருவோர குழந்தைகள் என்ற இயக்கத்தின் வாயிலாக மகளிர் கல்வியை உறுதி செய்ய முனைப்பு காட்டி வருகிறது. ஒட்டுமொத்தமாக 20,000 சியரா லியோன் சிறுமிகள் முதல் இளம் வயதுபெண்களுக்கு கல்வியை உறுதி செய்வதுடன் அவர்களுக்கு தரமான கல்வியை வழங்கவும் இந்த அமைப்பு திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -