கிழக்கு மாகாணசபையில் ஆளுநரின் விசேட உரை..!

அப்துல்சலாம் யாசீம்-
கிழக்கு மாகாணசபையின் விசேட கூட்டம் எதிர்வரும் 4ஆம் திகதி புதன் கிழமை இடம் பெறும். அன்றைய தினம் ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ விசேட உரையாற்றவுள்ளார்.

இலங்கை அரசியலமைப்பின் பிரிவு 154டீ உப பிரிவு 8 மற்றும் 10 ஆகியவற்றுக்கு அமைவாக ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள தத்துவங்களுக்கு அமைய இந்த உரை இடம்பெறவுள்ளது.

இதன்பொருட்டு மே மாதம் 4 ஆம் திகதி சபையைக் கூட்டுமாறும், தவிசாளரின் சம்மதத்தோடு சகல உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்குமாறும் ஆளுநரின் செயலாளரினால் கிழக்கு மாகாணப் பேரவைச் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தவிசாளர் சந்திரதாச கலப்பதியின் சம்மதத்தோடு சகல உறுப்பினர்களுக்கும் கூட்டத்துக்கான அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண பேரவைச் செயலாளர் எம்.சீ.எம்.செரீப் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண ஆளுநராக ஒஸ்ரின் பெர்ணாண்டோ கடமையேற்ற பின் மாகாண சபையில் உரையாற்றவுள்ளமை இதுவே முதற்தடைவ என்பது குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -