மரம் விழுந்ததில் வீடுகள் சேதம்...!

க.கிஷாந்தன்-
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிளங்கன் கீழ்பிரிவு தோட்டத்தில் (கிளங்கன் வைத்தியசாலைக்கு அருகில்) சுமார் 100 வருடம் பழமைவாய்ந்த மரம் ஒன்றின் பாரிய கிளை ஒன்று முறிந்து விழுந்ததில் இரண்டு வீடுகளும் அருகில் உள்ள மாரியம்மன் கோவிலும் முற்றாக சேதமடைந்ததுடன் அதேவேளை மேலும் மூன்று வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

18.04.2106 அன்று காலை 7 மணியளவில் இடம்பெற்ற இந்த பாரிய சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு உயிர் சேதம் எதுவும் இடம்பெறவில்லை என தெரிவிக்கும் பொலிஸார் வீடுகளில் உள்ள பொருட்கள் முற்றாக சேதமடைந்திருப்பதாக தெரிவிக்கின்றனர்.

அதேவேளை முற்றாக சேதமடைந்துள்ள இரண்டு குடியிருப்புகளில் வசிப்பவர்கள் சம்பவ வேளையில் வீட்டில் இருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழமைவாய்ந்த மேற்படி மரத்தின் முறிந்து வீழ்ந்த கிளையை அப்புறபடுத்தும் நடவடிக்கையில் பொலிஸாரும்இ பிரதேசவாசிகளும் ஈடுபட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -