நீர்­கொ­ழும்பில் பிறந்த குழந்தையை 12 வயது மகன் மூலம் குழிதோண்டச் செய்து புதைத்த தாய்...!

நீர்­கொ­ழும்பு கொச்­சிக்­கடை எத்­கால பிர­தே­சத்தில் சிசு ஒன்று பிரசவிக்கப்பட்­டவு­டனே அதன் தாயினால் குழி­தோண்டிப் புதைக்­கப்­பட்ட சம்­பவம் தொடர்பில் குறித்த பெண்ணும் அவ­ரது கண­வரும் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

கைது செய்­யப்­பட்ட பெண்ணின் வாக்­கு­ மூ­லத்­துக்­க­மைய புதைக்­கப்­பட்ட குழந்­தையின் சடலம் மீட்­கப்­பட்டு மரண பரி­சோ­த­னை­க­ளுக்­காக நீர்­கொ­ழும்பு வைத்­தி­ய­சா­லையின் சட்ட வைத்­தி­ய­ருக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டது.

கணவர் மது­பா­வ­னைக்கு அடி­மை­யா­கி­யி­ருப்­ப­தனால் அவர்­க­ளது பொரு­ளா­தாரம் பாதிக்­கப்­பட்­டி­ருந்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இத் தம்­ப­தி­யி­ன­ருக்கு ஆறு பிள்­ளைகள் உள்­ள­தா­கவும் அவர்­களில் மூவர் சிறுவர் இல்­லங்­களில் வசித்­து­வ­ரு­வ­தாகவும் பிர­தே­ச­வா­சிகள் தெரி­வித்­துள்­ளனர்.

கடந்த 23 ஆம் திகதி தனது ஏழா­வது குழந்­தையை பிர­ச­வித்­தி­ருந்­த­துடன் தனது 12 வய­தான மக­னிடம் வீட்டின் பின் புற­மாக குழி ஒன்றை தோண்ட செய்து அதனுள் குழந்­தையை புதைத்­த­தாக கைதான பெண் தெரி­வித்­தி­ருந்தார்.

இப் பெண் குழந்­தையை பிர­ச­விக்கும் வரை அவர் கரு­வுற்­றிந்த விடயம் பிர­தே­ச­வா­சி­க­ளுக்கு தெரி­யாமல் மறைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் 12 வய­தான அப்­பெண்ணின் மகன் தனது நண்பர் ஒரு­வ­ரிடம் சம்­பவம் தொடர்பில் தெரி­வித்­த­த­னை­ய­டுத்து இவ்­வி­டயம் அனை­வ­ருக்கு தெரி­ய­வந்­துள்­ளது.

இவ்­வி­டயம் தொடர்பில் எத்­கல கிராம சேவ­க­ருக்கு தெரி­விக்­கப்­பட்­ட­த­னை­ய­டுத்து அவ­ரி­னூ­டாக கொச்­சிக்­கடை பொலி­ஸா­ருக்கு அறி­விக்­கப்­பட்­டது. பின்னர் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டி­ருந்த பொலிஸார் மேற்­படி இரு­வ­ரையும் கைது செய்­தி­ருந்­தனர்.

கைது செய்­யப்­பட்ட பெண்ணின் வாக்­கு­மூ­லத்­துக்­க­மைய புதைக்­கப்­பட்ட குழந்­தையின் சடலம் மீட்­கப்­பட்டு மரண பரி­சா­த­னை­க­ளுக்­காக நீர்கொழும்பு வைத்தியசாலையின் சட்ட வைத்தியருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த தம்பதியினர் கொச்சிக்கடை எத்கல பிரதேசத்தில் தென்னந்தோப்பு ஒன்றினை பராமரித்தவாறு அதில் கிடைக்கும் வருமானத்தினை கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -