இலங்கை இராணுவத்தின் 11 ஆவது பீரங்கிப்படையணி







ஏறாவூர் நிருபர் றிகாஸ்-
லங்கை இராணுவத்தின் 11 ஆவது பீரங்கிப்படையணி மட்டக்களப்பு-செங்கலடி வர்த்தகர் சங்கத்துடன் இணைந்து சித்திரைப்புத்தாண்டையொட்டி முதல் தடவையாக ஏற்பாடுசெய்த வேடிக்கை வினோத விளையாட்டு நிகழ்வுகள் செங்கலடி மத்திய கல்லூரி மைதானத்தில் 17.04.2016 மாலை நடைபெற்றன.

படையணியின் கட்டளையதிகாரி டெப்டினன்ட் கேர்ணல் நதீஷ் பெர்ணாந்துவின் முன்னிலையில் இராணுவம், பொலிஸ் மற்றும் அரசாங்க உயரதிகாரிகள் பலர் இங்கு பிரசன்னமாயிருந்ததுடன் நிகழ்வுகளில் ஆண்கள் பெண்கள் சிறுவர்களும் மிக ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

சாயப்பானை உடைத்தல், தலையணைச்சமர், பெண்களுக்கான தேங்காய் துருவுதல் கிடுகு பின்னுதல் சிறுவர்களுக்கான மிட்டாய் பொறுக்குதல் போன்ற சம்பிரதாய நிகழ்வுகளுடன் மெய்வல்லுனர் மற்றும் குழு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

வெற்றிபெற்றவர்களுக்கு பெறுமதிவாய்ந்த பரிசில்களும் வழங்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -