கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான போட்டிப்பரிட்சை...!

எப்.முபாரக்-
கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு தரம் 111 ஆம் வகுப்புக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இணைத்துக் கொள்ளுவதற்கான போட்டிப் பரீட்சைகள் அடுத்த மாதம் 9ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறுவதற்காக விண்ணப்பித்த பட்டதாரிகளுக்கு அனுமதி அட்டைகள் அனுப்பி வைத்துள்ளதாக கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் எச்.இ.எம்.டபிள்யூ.ஜி.திஸாநாயக்கா அறிவித்துள்ளார். 

அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சைகள் திருகோணமலை உவர்மலை விவேகானந்த கல்லூரியில் நடத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அனுமதி அட்டைகள் கிடைக்காத பட்டதாரிகள் கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவிடம் தொடர்பு கொள்ளமுடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -