சிங்க லே நகரிலுள்ள முஸ்லிம் கடைகளை அகற்றறு மாறு கோரி சுவரொட்டிகள் (PHOTOS )

இக்பால் அலி-

கெக்கிராவை நகரில்  சிங்கலே என்ற பெயரில் நகரிலுள்ள முஸ்லிம் கடைகளை அகற்றறு மாறு  கோரி சுவரொட்டிகள் நேற்று இரவு 9.00 மணி அளவில் ஒட்டப்பட்டுள்ளது.

இந்தச் சுவரொட்டிகள் ஒட்டும் போது பொலிஸாரிடம் மக்கள் முறைப்பாடு தெரிவித்த போதிலும் பொலிஸார் எந்த நடவடிக்கை எடுக்க வில்லை எனவும் சுவரொட்டிகள் ஒட்டும் போது பொலிஸார் பகிரங்கமாக பார்த்துக் கொண்டு நின்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் பொறுமை இழந்த நகரிலுள்ள முஸ்லிம் கடை வியாபாரிகள்   பொலிஸ நிலையம் சென்று  இந்த சுவரொட்டிகளை அகற்றித் தருமாறு கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து நகரிலுள்ள சில சுவரொட்டிகள் இரவோடு இரவாக பொலிஸாரால் அகற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சுவரொட்டிகளில் முஸ்லிம் கடைகளை கெக்கிராவையிலிருந்து அகற்ற வேண்டும். முஸ்லிம்களை விரட்ட வேண்டும் என்ற வாசகங்கதுள் பொதிந்த சுவரொட்டிகள் இங்கு ஒட்டப்பட்டுள்ளன.

அத்துடன் சுவரொட்டி ஒட்டியவர்கள் பேருவளை மற்றும் அலுத்கமை போன்ற மாதரித்தான் இங்கேயும் நடரிக்க்கும் என்று எச்சரிக்கை விடுத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -