இம்போட்மிரர் ஊடக வலையமைப்பின் மற்றுமொரு சேவையான சிகரம் சர்வதேச வானொலி நடாத்திய அரசியல் களம் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த கிழக்கு மாகாண ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் குழுத்தலைவரும் உறுப்பினருமான ஆர்.எம்.அன்வர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணசபை நடவடிக்கைகள் எதனையும் உங்கள் கூட்டாட்சியில் தன்னிட்சையாக செய்ய முடியாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்ற கேள்வியினை நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்டதற்கு இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்.
நான் கடந்த மாகாண சபையிலும் உறுப்பினராக இருந்தவன் எனவே முன்னாலிருந்த ஆளுநரிடம் பேசி ஒருவேலையை நிறைவேற்றுவது இலேசாகவிருந்தது. ஆனால் இப்போதைய ஆளுநர் தான் நினைப்பதனை மட்டும் செய்து கொண்டு மக்கள் பிரதி நிதிகளை மதிக்காமல் நடந்து கொள்வதானது ஏற்றுக்கொள்ள முடியாதது. எனவே அடுத்த சபையில் இதுசமந்தமாக ஒரு பிரேரணை சமர்ப்பிக்கவிருக்கிறேன் என்று தெரிவித்தார்.
0 comments :
Post a Comment