அடுத்து நாமல் : ஆஜராகுமாறு நாமலுக்கு அழைப்பு

பொலிஸ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. எனினும் அவர் ஆஜராக வேண்டிய தினம் குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை.

பிரபல றகர் வீரர் வசீம் தாஜுத்தீன் கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காகவே நாமல் ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுத்திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இக்குற்றச்சாட்டின் கீழ் பெரும்பாலும் இந்த வார நடுப்பகுதிக்குள் அவர் கைது செய்யப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்படுவது குறித்த தகவல்கள் முன்கூட்டியே கசியவிடப்பட்டதன் காரணமாக வெலிக்கடை சிறைச்சாலையில் முக்கிய பிரமுகருக்கான சிறைக் கொட்டடி தயார்படுத்தி வைக்கப்பட்டுள்ளமை குறித்தும் கடந்த சில நாட்களாக தகவல்கள் பரவியுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -