மேசைக்கு மேல் ஏறிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர்

பைஷால்இஸ்மாயில்-

கிழக்கு மாகாண சபை அமர்வை 10 நிமிடங்களுக்கு மாகாண சபைத் தவிசாளர் சந்திரதாச கலபதி ஒத்திவைத்தார்.

மாகாணசபை அமர்வு திருகோணமலை மாவட்டத்திலுள்ள மாகாண சபை அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை கூடியது.

இதன்போது, கடற்றொழில் நீர்வாழ் உயிரின வளங்கள் தொடர்பான பிரேரணையை கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் முன்வைத்து சபை அனுமதியையும் பெற்றார்.

இதனைத் தொடர்ந்து தேசிய சுதந்திர முன்னணியின் மாகாண சபை உறுப்பினர் மஞ்சுள பெர்னாண்டோ, 10 நிமிடங்களுக்கு சபையில் தான் உரையாற்றுவதற்கு அனுமதி கோரினார். இருப்பினும், அனுமதி கிடைக்காமையை அடுத்து குறித்த மாகாணசபை உறுப்பினர் மேசையின் மீது நின்று தான் உரையாற்றுவதற்கான அனுமதி கட்டாயம் தர வேண்டுமென்று சத்தமிட்டார்.

இதனைத் தொடர்ந்து சபை அமர்வு 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -