பசில் ராஜபக்ச தாக்கல் செய்திருந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நடவடிக்கை...!

தன்னை கைது செய்யப்படுவதனை தடுக்குமாறு உத்தரவிடக் கோரி முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தாக்கல் செய்திருந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த மனுவை எதிர்வரும் மார்ச் மாதம் 28ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. 

இந்த வழக்கிற்கு சம்பந்தப்பட்ட தகவல்களை தாக்கல் செய்வதற்கு காலம் தேவை என்று மனுதாரர்கள் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி கூறியிருந்தார். 

நிதி மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு தன்னை கைது செய்ய திட்டமிட்டிருப்பதாகவும், அவ்வாறு சட்டத்திற்கு முரணாக தான கைது செய்யப்படுவதினை தடுக்க இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி பசில் ராஜபக்ச உச்ச நீதிமன்றில் கோரியுள்ளதாக எமது அத தெரண செய்திளானர் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -