கிழக்கில் அமைச்சர் நஸீரின் அதிரடி நடவடிக்கை..!

எம்.வை.அமீர் -
கிழக்கு மாகாண அமைச்சரவை வாரியம் 16.02.2016 ஆம் திகதி முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தலைமையில் மாகாண சபை முதலமைச்சர் செயலகத்தில் கூடியது. அப்போது கிழக்கு மாகாண அபிவிருத்திகள் இவ்வருட ஒதுக்கீடுகள் தொடர்பாகவும்கலந்துரையாடப்பட்டதுடன் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் முன் மொழிந்த கோரிக்கைகளும் அமைச்சர் வாரியத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுஏற்றுக்கொள்ளப்பட்டது.

கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில் இருந்த சில வைத்திய சாலைகளை தரமுயர்த்த அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் கீழுள்ள அன்னமலை ஆரம்ப வைத்தியப்பிரிவை ’சீ’ தரத்துக்கும்,

மத்திய முகாமின் ‘சீ” தரத்தில் இருந்த வைத்திய சலையை ‘பி” தரத்திற்கும்,

இறக்காமம் ‘சி’ தரத்திலான வைத்தியசாலையை ‘ஏ’ தரத்திற்கும்,

ஆலங்குளம் ஆரம்ப சுகாதார வைத்திய பிரிவை ‘சி’ தரத்திற்கும்,

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையை “ஏ’ தர வைத்தியசாலையாகவும்,

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் கீழுள்ள 

சந்திவெளி ‘சி” தரத்திலான வைத்தியசாலையை ‘பி’ தரத்திற்கும், 

மையிலடித்தீவு ‘சி” தர வைத்தியசாலையை “ஏ’ தரத்திற்கும் தரமுயர்த்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபையின் சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் குறிப்பிடுகையில்: 

திருகோணமலை மாவட்டத்தின் கஷ்டப்பிரதேஷமாக விளங்கும் இறக்கக்கண்டியில் மத்திய மருந்தகம் புதிதாக அமைக்கவும்அமைச்சரவை வாரியம் முழு அனுமதி வழங்கியுள்ளதாகவும்,அமைச்சர் மேலும்தெரிவித்தார்.

அண்மையில் சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் என்.ஆரிப் தலைமையில், “ஒரே நாடு பெரும் சக்தி” எனும் தொனிப்பொருளில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 68வது சுதந்திர தின நிகழ்வும், புனர் நிர்மாணம் செய்யப்பட வெளி நோயாளர் பிரிவை திறந்து வைக்கும் நிகழ்வும் சாய்ந்தமருது வைத்தியசாலையின் அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர், சாய்ந்தமருது பள்ளிவாசல் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கம் என்பன முன்வைத்துள்ள தரமுயர்த்தல் சம்மந்தமான கோரிக்கையை நிறைவேற்றித்தருவதாக வாக்குறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -