கஞ்சாவுடன் சிவனொளிபாதமலைக்கு யாத்திரைகளாக வந்த ஆறு இளைஞர்கள் பொலிஸாரால் கைது..!

க.கிஷாந்தன்-
கொழும்பு கொட்டாவை மற்றும் கம்பஹா பிரதேசத்திலிருந்து சிவனொளிபாதமலைக்கு யாத்திரைகளாக வந்த ஆறு இளைஞர்களிடம் கஞ்சா போதைபொருள் பக்கட்கள் கினிகத்தேனை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

16.01.2016 அன்று பிற்பகல் கினிகத்தேனை நகரில் ரோந்து கடமையில் ஈடுப்பட்டிருந்த கினிகத்தேனை பொலிஸாரால் இந்த அறுவர் பயணித்த வாகனம் தீடிரென பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட போது இவர்களிடம் கஞ்சா தொகை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த அறுவரையும் கைது செய்த கினிகத்தேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட பின் 16.01.2016 அன்று மாலை அட்டன் பதில் நீதவான் எஸ்.கருணாகரன் முன்னிலையில் ஆஜர்செய்த பொழுது சந்தேக நபர்களை இம்மாதம் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -