எப்.முபாரக்-
திருகோணமலை கந்தளாயில் வழக்குத்தவணைகளுக்குச் சமூகமளிக்காத ஒருவரை இம்மாதம் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் ருவன் திஸாநாயக்க இன்று திங்கட்கிழமை (4)உத்தரவு பிறப்பித்தார்.
மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கொன்று கந்தளாய் நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையிலே குறித்த சந்தேக நபர் பல வழக்குகளுக்கு சமூகமளிக்காது தலைமறைவாக இருந்த நிலையிலே சந்தேக நபரை பொலிஸார் இன்று திங்கட்கிழமை (4) காலையில் கைது செய்து நீதிமன்றில் பொலிஸார் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
