மாடறுப்பை ஜனாதிபதியால் தடை செய்ய முடியாது : ஹக்கீம் விடமாட்டார் - ராவணா பலய



இலங்­கையில் மாடுகள் அறுப்­பது முற்­றாக இல்­லாமற் செய்­யப்­பட வேண்­டு­மென்ற ஜனா­தி­ப­தியின் கருத்து வர­வேற்­கத்­தக்­கது. ஆனால் ஜனா­தி­ப­தி­யினால் இதனைச் செய்ய முடி­யாது.

அவ­ருடன் இருக்கும் அமைச்சர் ஹக்கீம் போன்­ற­வர்கள் இதற்கு இட­ம­ளிக்க மாட்­டார்கள் என ராவணா பலய அமைப்பின் செய­லாளர் இத்­தே­கந்த சத்­தா­திஸ்ஸ தேரர் தெரி­வித்­துள்ளார்.

இலங்­கையில் மாடுகள் அறுப்­பது தடை­செய்­யப்­ப­டு­வது மாத்­தி­ர­மல்ல வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து இறைச்சி இறக்­கு­ம­தியும் தடை செய்­யப்­பட வேண்டும் என்­பதே ராவணா பல­யவின் நிலைப்­பா­டாகும் என்றும் கூறினார்.

நாட்டில் மாடுகள் அறுப்­பது தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வெளி­யிட்­டுள்ள கருத்து தொடர்பில் ராவணா பல­யவின் நிலைப்­பாட்­டினை விளக்­கு­கை­யிலே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரி­விக்­கையில்,
இலங்­கையில் மாடுகள் அறுப்­பது தடை செய்யப்பட வேண்­டு­மென தொடர்ந்து பல வரு­டங்­க­ளாக ராவணா பலய வலி­யு­றுத்தி வரு­கி­றது.
கடந்த அர­சாங்­கத்தின் ஆட்சிக் காலத்தில் அப்­போ­தைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவிடம் மாட­றுப்­ப­தற்கு எதி­ராக நாம் மகஜர் ஒன்­றி­னையும் சமர்ப்­பித்தோம். மக­ஜரில் ஒரு இலட்­சத்­துக்கும் மேற்­பட்டோர் கையொப்­ப­மிட்­டி­ருந்­தனர்.

எதிர்ப்பு ஊர்­வ­லங்­க­ளையும் நடத்­தினோம். ஆனால் மஹிந்த ராஜபக் ஷ எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­க­வில்லை.

மஹிந்த ராஜபக் ஷவின் அர­சாங்­கத்­திலும் ஹக்கீம் உட்­பட முஸ்லிம் அமைச்­சர்கள் இருந்­தார்கள். அவர்கள் எதிர்ப்புத் தெரி­வித்­ததால் மஹிந்த ராஜபக் ஷ எது­வித நட­வ­டிக்­கையும் எடுக்­க­வில்லை.

கடந்த வாரம் பயா­க­லையில் நடை­பெற்ற இந்­துக்­களின் பொங்கல் விழா­விலே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இவ்­வா­றான கருத்­தினை வெளி­யிட்­டுள்ளார். மாடு­களை இந்­துக்கள் தெய்­வ­மாக வணங்­கு­கி­றார்கள்.

அதனால் இந்து மக்­களின் ஆத­ர­வினைப் பெற்றுக் கொள்­வ­தற்­கா­கவே ஜனா­தி­பதி இவ்­வாறு கருத்துத் தெரி­வித்­துள்ளார்.

உண்­மையில் அவர் மாடுகள் அறுப்­பதை தடை­செய்­யப்­போ­வ­தில்லை.

ஜனா­தி­பதி மாடுகள் அறுப்­பதை நிறுத்த வேண்­டு­மெனத் தீர்­மா­னித்தால் பொலிஸ்மா அதிபர் மூலம் சகல பொலிஸ் நிலை­யங்­க­ளுக்கும் சுற்றுநிருபம் மூலம் அறி­வித்து உட­ன­டி­யாகத் தடை­செய்­யலாம். தடை­யுத்­த­ர­வினை பொலிஸார் அமுல்­ப­டுத்­து­வார்கள்.

இதை­வி­டுத்து வெறு­மனே கூட்­டங்­களில் அல்­லது விழாக்­களில் கருத்து தெரி­விப்­பதன் மூலம் எவ்­வித பயனும் ஏற்­ப­டப்­போ­வ­தில்லை. இந்­துக்கள் மாடு­களை தெய்­வ­மாக வணங்­கு­கி­றார்கள். பௌத்தர்கள் மாடுகளை ‘கிரி அம்மா’ வாக பராமரிக்கிறார்கள். 

அதனால் மாடுகள் அறுப்பது தடைசெய்யப்பட வேண்டும். அதனுடன் சேர்த்து மாட்டிறைச்சி இறக்குமதியும் தடைசெய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ராவணா பலய இருக்கிறது என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -